ஏன் வேண்டும் விதை சேமிப்பு

அடிப்படைகள்

சிவகாமி · 23/10/2018

நாட்டு பாரம்பரிய மரபு விதைகள் எந்த சூழலுக்கும் ஏற்றவாறு தகவமைத்து கொள்ளும் தன்மைகொண்டது. நாட்டு விதைகள் என்று நாம் குறிப்பிடுவது அந்தந்த பகுதி சார்ந்தது, வெள்ளூர் முள்ளு கத்திரி அந்த பகுதியில் செம்மையாக வளரும், விளையும். அதே விதை மற்ற பல பகுதியிலும் விளையும் சுவையும், விளைச்சலும் சற்று மாறுபடும். மேலும் மரபு விதைகள் கடும் வறட்சி மற்றும் வெள்ளத்தையும், தாங்கி வளரக்கூடியது, நல்ல விளைச்சலை தரக்கூடியது, அதிக வீரியம் கொண்டவையாகவும் இயல்பிலே பூச்சுதக்குதலை எதிர்கொள்ளும் தன்மையுடனும், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாவும் உள்ளவை. அதிக நீர் பாய்ச்சாமல் குறைவான நீரிலே வளரும் தன்மை கொண்டது.